
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வேக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வேயின் அணித்தலைவர் சிகண்டர் ராசா, இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியில் வொஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்கை அக்ஸர் பட்டேல், சஞ்சு சாம்சன் பிரதியிட்டிருந்தனர். சிம்பாப்வேயில் கடந்த போட்டியில் விளையாடிய கிறேமி கிறீமரை டினொடென்டா மபோஸா பிரதியிட்டிருந்தார்.

