
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை முதலில் களத்தடுப்பிலீடுபடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையின் அணித்தலைவர் தசுன் ஷானக, இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய குசல் பெரேரா, பிரமோத் மதுஷனை கமில் மிஷார, துஷ்மந்த சமீர பிரதியிட்டிருந்தனர்.

