இந்த ஆண்டின் விண்கல் மழை இன்றிரவு மற்றும் நாளை இரவு நிகழும் என்று ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு பிறந்த 3 நாட்களில் வானில் விண்கற்கள் சரமாரியாக விழப்போகின்றன.
‘குவாட்ரான்டிட்ஸ்’ (Quadrantids) எனப்படும் இந்த விண்கல் மழை, இன்று இரவு தொடங்கி 4 அதிகாலை வரை உச்சத்தில் இருக்கும்.
மேலும், நாளை அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை வடகிழக்கு வானத்தில் விண்கல் மழை தெரியும்.
1 மணி நேரத்திற்கு 100 விண்கற்கள் வரை விழக்கூடும்.
அதிகாலையில் வடகிழக்கு திசையை நோக்கிப் பார்த்தால், நிலவின் வெளிச்சத்தையும் மீறி சில பிரகாசமான எரிநட்சத்திரங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. R

