
இந்தியாவின் கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் பெரிய அளவிலான மக்கள் கூடல்கள் மற்றும் மதத் திருவிழாக்களின்போது முறையற்ற கூட்ட மேலாண்மை காரணமாக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நெரிசல்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு.
இந்துக்களின் கடவுளான சிவபெருமானை வணங்குவதற்காக ஏராளமான மக்கள் திரண்டிருந்த பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் (Ashok Dham) கோயிலிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோயில் வளாகத்திற்குள் மின்கம்பம் ஒன்று பக்தர்கள் மீது விழுந்ததாகப் பரவிய வதந்தியே இந்த நெரிசலுக்கான காரணம் என மாவட்ட நடுவர் சைலேந்திர குமார் ஏ.எப்.பி. (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

