நவகமுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் கட்டிடத்தின் உட்புறம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் குறித்த கட்டிடத்தில் இருந்த துணி கிடங்கு மற்றும் பல ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மாநகர சபை மற்றும் கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


