Tamilnadu
oi-Halley Karthik
சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் டி.கே.சிவகுமார் தலைமையிலான கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எந்த வித அனுமதியுன் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
தீர்மானத்தின் மீது முதல் நபராக உரையாற்றிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளார். அதேபோல தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் தீர்மானத்திற்கு ஆதரவாக பேசியிருக்கின்றனர்.

உதயநிதியின் கோரிக்கை

‘மேகதாது பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை, மேகதாது தனித் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம்
லைவ் நிறுத்தம்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. சட்டமன்ற நேரலை தடையின்றி தொடரும் என்று அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கூறியிருந்த நிலையில், தற்போது நேரலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
தீர்மானம் நிறைவேற்றம்
மேகதாது அணை குறித்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை தீர்மானத்தில் சேர்க்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
திமுக ஆதரவு
மேகதாது அணைக்கு எதிராக திமுக மேற்கொண்ட நடவடிக்கைகளை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டு, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மீது அட்டாக்
மேகதாது அணை விவகாரத்தில், எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சி, கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் திமுக அதை கடுமையாக எதிர்த்தது. – உதயநிதி ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி ஆதரவு
மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீரமானத்தை, அதிமுக ஒருமனதாக ஆதரிக்கிறது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பட்டியல் போடும் எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணைக்கு எதிராக அதிமுக மேற்கொண்ட நடவடிக்கைகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தில் பட்டியலிட்டு வருகிறார்.

