
January 04, 202510:15 AM IST
Tamil Live Breaking News: திமுக எம்.பி.கதிர் ஆனந்த் வீட்டில் ED சோதனை நிறைவு
வேலூரில் திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, நள்ளிரவு 1.30 மணிக்கு நிறைவுபெற்றது. ஆனால் கதிர் ஆனந்த்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

