April 15, 20259:49 AM IST
Tamil Live Breaking News : விருத்தாசலம் புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா? – அமைச்சர் கே.என்.நேரு பதில்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், விருத்தாசலம் புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, இடம் இருந்தால் உடனடியாக பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு சொந்தமான இடம் பைபாஸ் சாலையில் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லை என்றால் விலைக்கு வாங்கி கூட கட்ட தயாராக உள்ளோம் என்று பதில் அளித்தார்.
மேலும் தற்போது உள்ள விருத்தாசலம் பேருந்து நிலையத்தை 90 லட்சம் செலவில் மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பதில் அளித்தார்.

