February 19, 202511:41 AM IST
Tamil Live Breaking News : இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதால், இந்திய அணி போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் உள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன

