இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பேசியிருக்கிறார். ” இது எங்கள் முதல் உலகக் கோப்பை. நாங்கள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்று தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவோம் எனப் பலரும் நம்பவில்லை. இந்தத் தொடரில் கற்ற பாடங்களின் மூலமாக அமெரிக்க அணி மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்.
ஃபிரான்சைஸ் கிரிக்கெட் மிகவும் நல்லது மற்றும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எனவே அமெரிக்க வீரர்கள் அதுமாதிரியான கிரிக்கெட் போட்டிகளில் முடிந்தவரை கலந்துக்கொண்டு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
