Last Updated:
விழுப்புரம் மாவட்டத்தில், புதிதாக நீச்சல் விளையாட்டு பயிற்சி (நீச்சல் அகாடமி) மையத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில், நீச்சல் விளையாட்டு பயிற்சி மையத்தை ஏற்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், விளையாட்டு துறை சார்பில், புதிதாக நீச்சல் விளையாட்டு பயிற்சி மையம் துவங்கப்படுகிறது. இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழக அரசு, விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் அந்தந்த மாவட்டங்களில் பிரபலமாக உள்ள விளையாட்டுகளில், கூடுதல் கவனம் செலுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை, பல்வேறு உயரிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைத்து, அதிக அளவில் வெற்றி பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், புதிதாக நீச்சல் விளையாட்டு பயிற்சி (நீச்சல் அகாடமி) மையத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில், நீச்சல் விளையாட்டு பயிற்சி மையத்தை ஏற்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் அகடாமி பயிற்சி மையத்தில் (டே போர்டர் ஸ்கீம்) நீச்சல் பயிற்சி பெறுவதற்கு, 12 வயது முதல் 21 வயது வரை உள்ள 20 மாணவர்கள், 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், காலை மற்றும் மாலை நேரத்தில், மாதத்தில் 25 நாட்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தனி பயிற்சியாளரும் நியமிக்கப்பட உள்ளார்.
இந்த நீச்சல் பயிற்சி மையத்தில் சேர்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வு வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு, கலெக்டர் பெருந்திட்ட வளாக நீச்சல் குளத்தில் நடக்கிறது.
இதையும் வாசிக்க: யானை வடிவ மலை.. 2000 அடி உயரத்தில் வீற்றிருக்கும் முருகர்.. சின்ன திருச்செந்தூர் சிறப்புகள் என்ன ?
இத்தேர்வில், நீச்சல் ஆர்வமுள்ள மாணவர்கள், உரிய ஆவனங்களுடன் பங்கேற்கலாம். மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 7401703485 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Viluppuram,Viluppuram,Tamil Nadu
April 18, 2025 4:25 PM IST


