Last Updated:
மின்சார ஸ்கூட்டர்களுக்கு லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LPF) பேட்டரிகளைப் பயன்படுத்துவது என்பது ஒரு ஸ்மார்ட்டான மற்றும் பாதுகாப்பான தேர்வாகும்.
மின்சார ஸ்கூட்டர்களுக்கு லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LPF) பேட்டரிகளைப் பயன்படுத்துவது என்பது ஒரு ஸ்மார்ட்டான மற்றும் பாதுகாப்பான தேர்வாகும், அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வழங்குகின்றன – இதனால் அவை மின்சார வாகனத் துறையில் வெகு விரைவான முறையில் பிரபலமடைகின்றன.
இன்று, மின்சார இரு சக்கர வாகனங்கள் பொதுவாக இரண்டு வகையான பேட்டரிகளைப் பயன்படுத்துகின்றன: நிக்கல் மாங்கனீசு கோபால்ட் (NMC) மற்றும் லித்தியம் இரும்பு பாஸ்பேட் (LFP). இந்த இரண்டு பேட்டரி வகைகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள இந்தப் பதிவு உங்களுக்கு உதவும்.
LFP பேட்டரி (பொதுவாக LiFePO₄ பேட்டரி என்று அழைக்கப்படுகிறது) என்பது லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரியைக் குறிக்கிறது. இது மின்சார வாகனங்கள், குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் வணிகத்திற்கான மின்சார வாகனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை லித்தியம்-அயன் பேட்டரி ஆகும்.
LFP பேட்டரிகள் நீண்ட ஆயுளை வழங்கும், இதனால் அவை மிகவும் நீடித்தத்தன்மையுடனும் நம்பகமானதாகவும் இருக்கும். அவை சிறந்த வெப்ப மற்றும் வேதியியல் நிலைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன, இது அதிக வெப்பமடைதல் அல்லது தீப்பிடிக்கும் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
கூடுதலாக, LFP பேட்டரிகளின் கலவையில் கோபால்ட் மற்றும் நிக்கல் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் இல்லாததால் அதிக செலவு குறைந்தவை. அவை அதிக வெப்பநிலையில் சிறப்பாகச் செயல்படுவதுடன் அவற்றின் வெளியேற்ற சுழற்சி நிலையான மின்னழுத்த வெளியீட்டை வழங்குகின்றன.

NMC பேட்டரி என்பது நிக்கல் மாங்கனீசு கோபால்ட் பேட்டரியைக் குறிக்கிறது. இது நிக்கல், மாங்கனீசு மற்றும் கோபால்ட் ஆகியவற்றின் கலவையை கேத்தோடு மெட்டீரியலாகப் பயன்படுத்தும் ஒரு வகை லித்தியம்-அயன் பேட்டரி ஆகும்.
NMC பேட்டரிகள் மின்சார வாகனங்களில் வேகத்தை வழங்கக்கூடிய உயர் செயல்திறன் பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளன.
இது EV பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மையை வழங்குவதுடன் ஆற்றல் சேமிப்பு மற்றும் ஆற்றல் வெளியீட்டை சமநிலைப்படுத்துவதில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன, இது நிலையான ஆற்றல் தேவைப்படும் பரந்த அளவிலான உபயோக முறைகளில் பல்துறை திறன் கொண்டதாக ஆக்குகிறது.

இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களின் பிரம்மிப்பூட்டும் வளர்ச்சியின் காரணமாக, “இதில் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?” என்பதற்கு பதிலாக “இது எவ்வளவு பாதுகாப்பானது” என்றும் இது எவ்வளவு காலம் நீடிக்கும்?” என்றும் மிக முக்கியமான கேள்விகளாக மாற்றம் அடைந்துள்ளன. நீண்ட ஆயுள், நம்பகத்தன்மை மற்றும் பேட்டரி ஆயுள் ஆகியவை இப்போது ஒவ்வொரு மின்சார வாகனத்தை வாங்குபவரின் முடிவை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. மேலும் இந்த எல்லா பதில்களுக்கும் பேட்டரிதான் மையமாக இருக்கிறது. அதனால்தான் இது ஒரு மின்சார வாகனத்தின் “இதயம்” என்று அழைக்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இது ஒரு விளம்பரதாரர் கட்டுரை. கட்டுரையில் உள்ள தகவல்களை நியூஸ்18 உறுதிபடுத்தவில்லை.
November 21, 2025 2:56 PM IST


