இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 8ஆவது அதிபர் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார்.
இதையடுத்து, 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சியால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 38 பேர் போட்டியிடும் நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுர குமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
இதையும் படிக்க:
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு – ஏற்பாடுகள் தீவிரம்…
இந்த தேர்தலில், 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் 50 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.
மேலும் இந்த முறை ரணில் விக்ரமசிங்க – சஜித் பிரேமதாசா – அனுரகுமார திஸநாயகே என மும்முனைப் போட்டி நிலவுவதால் இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான அதிபர் தேர்தலாக இது இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை தெரிந்துகொள்ள
இங்கே கிளிக் செய்யவும்.
இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ்18 தொலைக்காட்சியுடன் இணைந்திருங்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
