ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் நடக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் ஐதராபாத் அணியை, ராஜஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால், இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், இந்த போட்டியில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கைகள் தான் ஓங்கி இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில், சேப்பாக்கம் மைதானம் எப்போதும் சுழற்பந்து வீச்சு சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு இல்லை என்றால், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழல் இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
இதையும் படிக்க:
“வெற்றிக்கு இவர்கள்தான் முக்கிய காரணம்” – கேப்டன் சஞ்சு சாம்சன் பாராட்டு!
இதனால், அஸ்வின், சாஹல் மற்றும் மஹாராஜ் ஆகிய மூவரும் ராஜஸ்தானின் பிளேயிங் லெவனில் களமிறங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக் ஆகிய மூவரும் சென்னை பிட்சிற்கு ஏற்றவாறு பேட்டிங் செய்யக் கூடியவர்கள். மேலும், சேப்பாக்கம் மைதானம் அஸ்வினுக்கு மிகவும் பரிச்சயமானது என்பதால், அவரை பயன்படுத்தி ராஜஸ்தான் அணி வெல்லும் திட்டத்தை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மறுபக்கம் ஐதராபாத் அணி முழுக்க முழுக்க கம்மின்ஸ், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சை நம்பியே களமிறங்குகிறது. ஷபாஸ் அகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழற்பந்து சேப்பாக்கம் மைதானத்தில் எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவை வீழ்த்தினாலே ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்து விடலாம். இருப்பினும், ஐதராபாத் அணி 6 ஓவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தாலே, வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)