தென் கொரியாவில், கட்டாய ராணுவ பணியிலிருந்து தப்பிக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கிய இளைஞரைப் பிடித்து அரசு சிறையிலடைத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தென் கொரியாவைப் பொறுத்தவரை, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடமாவது ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

