Last Updated:
மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்ஐஆரில் தங்களது பெயர்களை நீக்கியதைக் கண்டித்து, நீதித்துறை அதிகாரிகளை பொது மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மால்டா பகுதியில் சென்று கொண்டிருந்த நீதித்துறையை சேர்ந்த 3 பெண் அதிகாரிகள் உள்பட 7 பேரை பொது மக்கள் சிறைபிடித்தனர்.
சுமார் 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காவல் துறை மற்றும் துணை ராணுவப்படையினர் தலையிட்டு பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 7 நீதித்துறை அதிகாரிகளை மீட்டனர்.
இருப்பினும், அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
SIR | மேற்கு வங்க நீதித்துறை அதிகாரிகளை சிறைபிடித்த விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


