Last Updated:
முகமது ஷமி, முகமது கைஃப் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியது. மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பேர் பட்டியலில் நீக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் போது அளித்த தகவல்கள் போதுமானதாக இல்லாததால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோதும், விவரங்கள் போதுமானதாக இல்லை என ஒரு கோடி பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர்.படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படும் நிலையில், உரிய ஆவணங்களுடன் வரும் 9-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஷமி, கிரிக்கெட் விளையாட்டிற்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறிவிட்டது குறிபிடத்தக்கது. முகமது ஷமியின் சகோதரர் முகமது கைஃப்-க்கும் சம்மன் அனுப்பட்டுள்ளது. இதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும் நடிகருமான தீபக் அதிகாரிக்கும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
Jan 06, 2026 11:15 AM IST


