Last Updated:
மும்பையிலிருந்து 8 மணிக்கு அஜித்பவார் புறப்பட்ட நிலையில், 9.12 மணி அளவில் விபத்து நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 8-வது துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இன்று 10 மணி அளவில் இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிறிய விமானம் மூலம் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் சரத்பவார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் அஜித் பவாருடன் சென்ற 4 பேரும் உயிரிழந்துள்ளனர். பாராமதி விமான ஓடுதளம் என்பது மிகச்சிறியது. அதில் தரையிறங்கும்போது, விமானம் விபத்துக்குள்ளாயிருக்கிறது. மும்பையிலிருந்து 8 மணிக்கு அஜித்பவார் புறப்பட்ட நிலையில், 9.12 மணி அளவில் விபத்து நடந்துள்ளது.
அஜித் பவார் சென்ற விமானத்தை பைலட் சாம்பவி பதக் ஓட்டிச் சென்றுள்ளார். அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.
சாம்பவி பதக், விபத்துக்குள்ளான ‘லியர்ஜெட் 45’ (Learjet 45) விமானத்தின் முதல் அதிகாரி அல்லது துணை விமானியாகப் பணியாற்றினார்.
இவர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர் ஃபோர்ஸ் பால் பாரதி’ பள்ளியில் பயின்றார். அதைத் தொடர்ந்து மும்பை பல்கலைக்கழகத்தில் வானூர்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.


