Last Updated:
இன்று முதல் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 10,070 என்ற விலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியால், கடந்த 2019-20 நிதியாண்டில் வெளியான ஒன்பதாம் கட்டம் மற்றும் 2020-21 நிதியாண்டில் வெளியான ஐந்தாம் கட்ட தங்கப்பத்திர கணக்குகளை முன்கூட்டியே முடிக்க, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, சவரன் தங்கப் பத்திரத்தின் (SGB) முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு தங்கப் பத்திர சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கியது. எட்டு ஆண்டுகளில் தங்கப் பத்திரம் முதிர்வடையும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் முன்கூட்டியே கணக்கை முடித்து முதிர்வுத் தொகையைத் திரும்பப் பெறலாம்.
இந்த நிலையில், கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் வெளியான ஒன்பதாம் கட்டம் மற்றும் 2020-21ல் வெளியான ஐந்தாம் கட்ட தங்கப்பத்திர கணக்குகளை முன்கூட்டியே திரும்பப் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 10,070 என்ற விலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-20ல் ஒன்பதாம் கட்டத்தில் கிராம் ஒன்றுக்கு 4,070 ரூபாயாக, யூனிட் ஒன்றில் முதலீடு செய்தவர்கள் தற்போது யூனிட்டுக்கு 6,000 என்ற மதிப்பில் 147 சதவீதம் முழுமையான லாபத்தைப் பெறுவர்.
August 11, 2025 12:36 PM IST


