உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, `ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட அதன் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்திருக்கும் இந்தியா, “இந்தியாவை டார்கெட் செய்வது நியாயமற்றது. மற்ற பிற மிகப்பெரிய பொருளாதாரங்களைப் போல, இந்தியாவும் தனது தேச நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு தேவையான விஷயங்களைச் செய்து வருகிறது” என பதிலளித்திருக்கிறது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா எல்லைப் பகுதிகளுக்கு நகர்த்த உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

