Last Updated:
Champions Trophy | அடுத்து விளையாட வந்த ஜாகேர் அலியும் அக்சர் படேல் பந்துவீச்சை அடிக்க முயல, அது எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் இருந்த ரோஹித் ஷர்மாவுக்கு கேட்ச் வாய்ப்பாக சென்றது.
ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டதற்காக இந்திய வீரர் அக்சர் படேலுக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா கொடுத்த வாக்குறுதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்தப்படுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்றது. வங்கதேசத்தின் 229 இலக்கை துரத்திய இந்திய அணி, ஷுப்மன் கில்லின் அசத்தல் சதத்தால் எளிதாக வெற்றிபெற்றது. இப்போட்டியின்போது பந்துவீசிய இந்திய அணி வீரர் அக்சர் படேலுக்கு தனது முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு உண்டானது. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருப்பார்.
அடுத்து விளையாட வந்த ஜாகேர் அலியும் அக்சர் படேல் பந்துவீச்சை அடிக்க முயல, அது எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் இருந்த ரோஹித் ஷர்மாவுக்கு கேட்ச் வாய்ப்பாக சென்றது. ஆனால், ரோஹித் எதிர்பாராதவிதமாக தவறவிட்டுவிடுவார். ரோஹித்திடம் பந்து செல்லும்போதே கொண்டாட்ட மனநிலைக்கு சென்ற இந்திய வீரர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்தனர். ஐசிசி தொடரில் அக்சர் படேலுக்கு கிடைக்க இருந்த அரிய ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பு என்பதால் அதனை மிஸ் செய்ததற்காக களத்திலேயே ரோஹித் ஷர்மா மன்னிப்பு கேட்டிருப்பார்.
இந்த நிலையில் தான் ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்டதற்காக பரிகாரமாக அக்சர் படேலுக்கு ரோஹித் ஷர்மா ஒரு உத்தரவாதம் கொடுத்துள்ளார். அதனை வெளிப்படுத்தியுள்ள ரோஹித் ஷர்மா, “கேட்சை விட்டது மிகப்பெரிய தவறு. இதற்காக அக்சர் படேலை சமாதானம் செய்ய அவரை இரவு உணவுக்கு அழைத்துச் செல்வேன்” என்று கூறியிருந்தார். சொன்னபடி ரோஹித் இரவு உணவுக்கு அழைத்துச் சென்றாரா என்பது குறித்து பேசியுள்ள அக்சர் படேல், “அடுத்த போட்டிக்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளது. மேலும், கிட்டத்தட்ட நாங்கள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டோம். எனவே, இப்போது ரோஹித்திடம் சென்று டின்னருக்கு அழைத்துச் செல்ல கேட்பேன்.” என்று கூறியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 25, 2025 6:32 PM IST


