Last Updated:
2027 உலகக்கோப்பை தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தனது உருவப்பத்தை தத்ரூபமாக வரைந்த ரசிகையை ரோஹித் சர்மா வாழ்த்தி பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றபோதிலும் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தயார்படுத்தி வருகிறார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2027 உலகக்கோப்பை ஒரு கிரிக்கெட் தொடருடன் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகை ஒருவர் ரோஹித் சர்மாவின் புகைப்படத்தை அற்புதமாக வரைந்துள்ளார்.
ஒருமுறை அந்த படத்தை ரசிகை ரோஹித் சர்மாவிடம் காண்பித்தபோது அவர் ரசிகையை வியந்து பாராட்டி அந்த ஓவியத்தில் ஆட்டோகிராஃப் வழங்கியுள்ளார். தலையில் தொப்பியும், அதன் மேல் கண்ணாடி இருக்கும்படி ரோஹித் சர்மாவின் முகத் தோற்றம் அந்த ஓவியத்தில் அற்புதமாக வரையப்பட்டுள்ளது.
தற்போது இந்த புகைப்படத்தை ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.
2027 உலகக்கோப்பை தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் 38 வயதாகும் அவர் அதற்கு முன்னரே ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை பெறவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
August 26, 2025 1:10 PM IST


