Last Updated:
அமித் ஷா ரைசிங் பாரத் 2023 மாநாட்டில், மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகக் காண்கிறது; இந்தியை மட்டும் ஊக்குவிக்கவில்லை என தெரிவித்தார்.
நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் (Rising Bharat) மாநாடு 2025-ல் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத் தான் பார்க்கிறது; இந்தியை மட்டும் ஊக்குவிக்க நினைக்கவில்லை. திமுகவின் ஒரு தலைவருக்குக்கூட தமிழில் கையெழுத்து போடத் தெரியாது எனத் தெரிவித்தார்.
நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் (Rising Bharat) மாநாடு 2025 டெல்லியில் 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், மொத்தம் 100க்கும் மேற்பட்ட தலைவர்கள், 75க்கும் மேற்பட்ட அமர்வுகளில் உரையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (9ஆம் தேதி) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரிவினையை விரும்பியவர்கள் காங்கிரஸ் அரசியல்வாதிகள் தான், சாமானிய இஸ்லாமியர்கள் அல்ல. பிரதமர் சரியாகத்தான் கூறியுள்ளார். தற்போதும் காங்கிரஸ் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத் தான் பார்க்கிறது; இந்தியை மட்டும் ஊக்குவிக்க நினைக்கவில்லை. திமுகவின் ஒரு தலைவருக்குக்கூட தமிழில் கையெழுத்து போடத் தெரியாது.
இதையும் படியுங்கள் : Rising Bharat Summit 2025: ”மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
வக்பு சட்டம் குறித்து கடந்த வாரம் இரு அவைகளிலும் விவாதம் நடந்தபோது, ராகுல் காந்தி அமைதியாக இருந்தார். வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி அவைக்கு வரவே இல்லை. அவர்களுக்கு வக்பு சட்டம் பெரும் பிரச்சனை என்றால் ஏன் வாயைத் திறக்கவில்லை? பிரியங்கா காந்தி ஏன் வாக்களிக்கவில்லை?
பேசுவதாகச் சொல்வார்கள். நான் இந்தி பேசுபவன் அல்ல. நான் குஜராத்தி. நமது வேர்கள் மற்றும் வரலாற்றுடன் இணைக்க விரும்பினால், அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
நமது அரசாங்கத்திற்கு முன்பு காங்கிரஸ் அனைத்து மொழி மாணவர்கள் மீதும் இந்தியையும், ஆங்கிலத்தையும் திணித்தது. நாம் அரசு தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்துகிறோம். மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவத்தை தங்களது பிராந்திய மொழிகளில் படிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
April 09, 2025 9:40 PM IST
Rising Bharat Summit 2025: ”அனைத்து மொழிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம்; இந்தியை மட்டும் ஊக்குவிக்க நினைக்கவில்லை” – அமித் ஷா


