Last Updated:
ஜியோ இந்தியாவில் AI புரட்சியை அறிவிக்கும். ஜியோ தனது செயல்பாடுகளை இந்தியாவிற்கு வெளியே விரிவுபடுத்தும். – முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியை கடந்து விட்டதாக அதன் சேர்மன் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 48 ஆவது ஆண்டு இறுதி பொதுக்குழு கூட்டம் மும்பையில் அதன் சேர்மன் முகேஷ் அம்பானி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்குதாரர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் பேசினார்.
கூட்டத்தில் பேசிய அவர், “இன்று, ஜியோ குடும்பம் 500 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தாண்டியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். 500 மில்லியன் மைல்கல் என்பது உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவின் அடையாளமாகும். உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜியோ என் வாழ்க்கையை மாற்றி விட்டது, நான் ஜியோவை அதிகம் விரும்புகிறேன் என மக்கள் பலர் சொல்வதை கேட்கிறேன். ஆனால் உண்மையிலேயே ஒவ்வொரு இந்தியரும் இணைந்துதான் ஜியோவை கட்டமைத்துள்ளார்கள்.
ஜியோவின் வருவாய் ரூ.1,28,218 கோடியாக ($15.0 பில்லியன்) இருந்தது, இது நிதியாண்டு-25 இல் 17% ஆண்டு வளர்ச்சியாகும்; மற்றும் EBITDA ரூ.64,170 கோடி ($7.5 பில்லியன்) ஆகும். இந்த புள்ளிவிவரங்கள் ஜியோ ஏற்கனவே உருவாக்கியுள்ள மகத்தான மதிப்புக்கு ஒரு சான்றாகும், மேலும் அது உருவாக்க விதிக்கப்பட்டுள்ளதை விட அதிக மதிப்பைக் கொண்டுள்ளது.
August 29, 2025 3:03 PM IST
RIL AGM 2025 : 50 கோடி வாடிக்கையாளர்களை கடந்து விட்டது ஜியோ.. பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தகவல்


