Last Updated:
77ஆவது Republic Day நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம், Chennai விமான நிலையம், Nagoor ஆண்டவர் தர்கா, Delhi அரசு கட்டடங்கள், Mumbai சத்ரபதி சிவாஜி விமான நிலையம் வண்ண விளக்குகள்.
நாடு முழுவதும் 77ஆவது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது..!
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஏழுடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேபோல, நாகூர் ஆண்டவர் தர்காவில் 150 அடி உயரமுள்ள பெரிய மினரா முழுவதும் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது.
மேலும் தலைநகர் டெல்லியில் உள்ள அரசு கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. டெல்லி சட்டப்பேரவை, ரயில் நிலையம், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் உள்ளிட்டவை மூவர்ண ஒளியில் மின்னின. அதேநேரம், தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு கட்டடங்கள், செனாப் பாலம் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் ஜொலித்தன. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகள், பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அதேபோல, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் விழா கோலம் பூண்டது.


