• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

QR கோடு இல்லாத உங்களுடைய தற்போதைய பான் கார்டு செல்லுமா? விரிவான தகவல்… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
QR கோடு இல்லாத உங்களுடைய தற்போதைய பான் கார்டு செல்லுமா? விரிவான தகவல்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பான் 2.0 திட்டமானது தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி காகிதமில்லா செயல்முறைகளுக்கு வழிவகுக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிரந்தரக் கணக்கு எண் அதாவது, பான் (PAN) அட்டை வைத்திருப்பவர்கள், மேம்படுத்தப்பட்ட பான் 2.0 அமைப்பின் கீழ் புதிய கணக்கிற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. இது முதன்மையாக வணிகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது அடையாளமாக அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வருமான வரித்துறை நவ.26ஆம் தேதி தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ), பான் (PAN) மற்றும் டான் (TAN) வழங்குதல் மற்றும் நிர்வகித்தலுக்கான செயல்முறையை சீரமைக்கவும், நவீனப்படுத்தவும் ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

விளம்பரம்

பான் என்பது இந்திய வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறையால் வழங்கப்படும் தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து எண். தற்போதுள்ள 78 கோடி பான் கார்டுகள் மற்றும் 73.28 லட்சம் டான்கள் கொண்ட பான் தரவுத்தளத்துடன், வரி செலுத்துவோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், பல தளங்கள் அல்லது போர்ட்டல்களை ஒருங்கிணைப்பதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது மற்றும் பான் அல்லது டான் வைத்திருப்பவர்களுக்கு திறமையாகவும், எளிமையாகவும் சேவைகளை வழங்குகிறது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) நவ.26இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

பான் 2.0 என்பது வருமான வரித்துறையின் (ITD) இ-சேவை திட்டமாகும். இது வரி செலுத்துவோர் பதிவுச் சேவைகளின் வணிக செயல்முறைகளை மறுசீரமைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் பான் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். வரி விலக்கு மற்றும் டேன் (TAN) தொடர்பான சேவைகளும் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) குறிப்பிட்டு CBDT மேலும் கூறியது, “தற்போதுள்ள பான் கார்டு வைத்திருப்பவர்கள் மேம்படுத்தப்பட்ட முறையின் கீழ் (PAN 2.0) புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை”. பான் வைத்திருப்பவர்கள் ஏதேனும் புதுப்பிப்பு/திருத்தம் செய்யாவிட்டால் பான் கார்டு மாற்றப்படாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தற்போதுள்ள செல்லுபடியாகும் பான் கார்டுகள், பான் 2.0 திட்டத்தின் கீழும் செல்லுபடியாகும்” என்று அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) கூறுகின்றன.

விளம்பரம்

CBDT மேலும், “QR கோடு ஒரு புதிய அம்சம் அல்ல. மேலும் இது 2017-18 முதல் பான் கார்டுகளில் இணைக்கப்பட்டுள்ளது” மேலும் இது PAN 2.0 திட்டத்தின் கீழ் மேம்பாடுகளுடன் தொடரும் (PAN தரவுத்தளத்தில் டைனமிக் QR கோடு, சமீபத்திய தரவைக் காண்பிக்கும்). “QR கோடு இல்லாமல் பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள், தற்போதுள்ள பான் 1.0 அமைப்பிலும், பான் 2.0 இல் QR கோடு கொண்ட புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்” என்று CBDT தெரிவித்துள்ளது.

விளம்பரம்

QR கோடு பான் விவரங்களை சரிபார்க்க உதவுகிறது

  • தற்போது, ​​QR கோடு மூலம் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட QR ரீடர் ஆப் உள்ளது.

  • QR கோடை ஸ்கேன் செய்யும்போது, ​​அதன் முழுமையான விவரங்களான – புகைப்படம், கையொப்பம், பெயர், தந்தையின் பெயர்/தாயின் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவை காட்டப்படும்.

  • தற்போதுள்ள பான் கார்டிலிருந்து பான் 2.0 எவ்வாறு வேறுபடும் என்பது குறித்து, அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு தளங்களின் ஒருங்கிணைப்புக்கு இந்த திட்டம் வழிவகுக்கும் என்று கூறியிருக்கிறது.

  • தற்போது, ​​பான் தொடர்பான சேவைகள் இ-ஃபைலிங் போர்டல் (e-filing Portal), யுடிஐஐடிஎஸ்எல் போர்டல் (UTIITSL Portal) மற்றும் புரோடீன் இ-கோவ் போர்டல் (e-Gov Portal) உள்ளிட்ட மூன்று வெவ்வேறு போர்டல்களில் வழங்கப்படுகின்றன.

  • பான் 2.0 திட்டத்தில், அனைத்து பான் அல்லது டேன் தொடர்பான சேவைகளும் ITD-யின் ஒரு ஒருங்கிணைந்த போர்ட்டலில் வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த போர்டலில் ஒதுக்கீடு, புதுப்பித்தல், திருத்தம், ஆன்லைன் பான் சரிபார்ப்பு (OPV), உங்கள் AO, ஆதார்-பான் இணைப்பு, உங்கள் பான் சரிபார்ப்பு, e-PANக்கான கோரிக்கை போன்ற பான் மற்றும் டேன் தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின்படி, பான் கார்டை மீண்டும் அச்சிடுவதற்கான கோரிக்கை உள்ளிட்டவை வழங்கப்படும்.

பான் 2.0 திட்டமானது தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி காகிதமில்லா செயல்முறைகளுக்கு வழிவகுக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பான் இன் ஒதுக்கீடு அல்லது புதுப்பிப்பு அல்லது திருத்தம் இலவசமாக செய்யப்படும் மற்றும் பதிவு செய்யப்பட்ட இமெயிலுக்கு ஈ பான் (e-PAN) அனுப்பப்படும்.

இதையும் படிக்க:
காப்பீடு எடுத்த பிறகு உங்கள் பணத்தை எல்ஐசி என்ன செய்கிறது தெரியுமா?

“பான் கார்டை கையில் பெறுவதற்கு, விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட்ட ரூ.50 (உள்நாட்டில்) கட்டணத்துடன் கோரிக்கையை எழுப்ப வேண்டும். இந்தியாவிற்கு வெளியே கார்டை டெலிவரி செய்வதற்கு, விண்ணப்பதாரரிடம் ரூ.15 + இந்திய அஞ்சல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்” என்று CBDTஇன் FAQ தெரிவித்துள்ளது.

விளம்பரம்

ஏற்கனவே PAN வைத்திருப்பவர்கள் மின்னஞ்சல், மொபைல் அல்லது முகவரி அல்லது பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை தங்களின் தற்போதைய பான் விவரங்களில் ஏதேனும் திருத்தம் அல்லது புதுப்பிப்பு செய்ய விரும்பினால், பான் 2.0 திட்டத்திற்குப் பிறகு அவர்கள் அதை இலவசமாக செய்யலாம்.

பான் 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்வரை, பான் வைத்திருப்பவர்கள் புதுப்பித்தல் அல்லது திருத்தம் செய்ய ஆதார் அடிப்படையிலான ஆன்லைன் வசதியைப் பெறலாம்.

பான் 2.0 திட்டம் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்

இந்த திட்டத்தின் கீழ், பான் ஒதுக்கீடு அல்லது புதுப்பிப்பு மற்றும் திருத்தங்கள் தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் வருமான வரித்துறை ஒருங்கிணைக்கிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ரூ.10,000 எமர்ஜென்சி லோனை உடனடியாக பெறுவது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

இதுதவிர, ஆன்லைன் பான் சரிபார்ப்பு சேவை மூலம் பான் அங்கீகாரம் அல்லது சரிபார்ப்பு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள், அரசு நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் போன்ற யூசர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

.

Read More

Previous Post

சதத்தை தவறவிட்ட வில்லியம்சன்; கிரீன் டாப்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பஷீர் | NZ vs ENG டெஸ்ட் | Williamson misses century new zealand england christchurch test cricket

Next Post

20 ஆண்டுகளாக மூக்கில் தங்கியிருந்த பகடை; அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்! – Chinese man finds 2 Cm dice stuck In nose after 20 years

Next Post
20 ஆண்டுகளாக மூக்கில் தங்கியிருந்த பகடை; அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்! – Chinese man finds 2 Cm dice stuck In nose after 20 years

20 ஆண்டுகளாக மூக்கில் தங்கியிருந்த பகடை; அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்! - Chinese man finds 2 Cm dice stuck In nose after 20 years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin