இந்தியாவில், சொத்துரிமைகள் மதம், பாலினம் மற்றும் உறவைப் பொறுத்து மாறுபடும். அந்த வகையில், சொத்தின் வாரிசுரிமை என்பது பல குடும்பங்களில் குழப்பம், தகராறுகள் மற்றும் சட்டப் போராட்டங்களை ஏற்படுத்தும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். அதிலும் குறிப்பாக, பெற்றோர் இறப்புக்கு முன்பு ஒற்றுமையாக இருக்கும் உடன்பிறப்புகள், அவர்கள் மரணத்திற்கு பிறகு சொத்திற்காக சண்டைபோட்டு நீதிமன்றம் செல்கிறார்கள். இதுபோன்ற மோதல்களை தடுக்க, பெற்றோர்கள் இறப்பதற்கு முன் ஒரு உயில் எழுதுகிறார்கள். இருப்பினும், உயிர் பதிவு செய்யப்படாவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்லும்போது அது செல்லுபடியாகுமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்திற்கான விடையை தற்போது இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.


