சொத்தில் கூட்டுரிமை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரரான சௌரப் குப்தா, தனது தாயின் பெயரில் வாங்கப்பட்ட சொத்தில் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், அந்த சொத்தை தனது தந்தையே வாங்கினார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அவர், அதில் தனக்கு கூட்டுரிமை உள்ளதாகக் கூறி உரிமை கோரினார். இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவன் மற்றும் மனைவி பெயரில் வாங்கப்பட்ட சொத்து, மனைவியின் சொந்த வருமானத்திலிருந்து வாங்கப்பட்டது என்று நிரூபிக்கப்படாத பட்சத்தில், அது குடும்பச் சொத்தாகவே கருதப்படும் என்று தெரிவித்தது.

