உதாரணமாக, 1960களின் முற்பகுதியில் ஒரு ஆண் தனது சொந்த தந்தையிடம் இருந்து சொத்தை பெற்றார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அவர் 1977-ல் உயில் எழுதாமல் இறந்துவிட்டார். அவர் இறக்கும் போது, அவருக்கு ஒரு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர். உயில் இல்லாததால் இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இறந்தவரின் மனைவி, மகன் மற்றும் மகள் அனைவரும் வகுப்பு I சட்டப்பூர்வ வாரிசுகள் (Class I legal heirs) ஆவர். இதன் பொருள் இறந்தவரின் சொத்து அவர்கள் மூவருக்கும் சமமாக வழங்கப்படும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றில் ஒரு பங்கு கிடைக்கும். இந்த நிலையில், மகள் இறந்தால், அவருடைய சொத்தை யார் வாரிசாகப் பெறுவார்கள்?


