பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்? பொதுவாக, செல்லுபடியாகும் அல்லது பதிவு செய்யப்பட்ட உயில் இல்லையென்றால், சொத்து விநியோகம் குடும்ப புரிதலின்படி இல்லாமல், மாறாக வாரிசுரிமைச் சட்டங்களின்படி செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஒரு நபரின் கேள்விக்கான பதிலை தற்போது பார்ப்போம். உதாரணமாக, ‘எனக்கு 45 வயது, எனக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர். 2011இல் நான் கையெழுத்திட்ட குடும்பப் பிரிவினைப் பத்திரம் என் தந்தை மற்றும் சகோதரரால் நோட்டரி மூலம் சான்றளிக்கப்படவில்லை. அசல் ஆவணம் இப்போது தொலைந்துவிட்டது. என் சகோதரிக்கு எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. ஒரு வீடும் வணிகச் சொத்தும் என் அம்மாவின் பெயரில் உள்ளன. என் அப்பா அவர்களுக்கு நிதியளித்து வாடகை வசூல் செய்கிறார். மேலும், எங்கள் கிராமத்தில் என் அப்பாவுக்கும் ஒரு வீடு இருக்கிறது. அங்கு விவசாய நிலம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. என் அம்மா முதலில் இறந்தால், இந்த சொத்துக்கள் எப்படி விநியோகிக்கப்படும்?, என் பெற்றோர் இருவரும் இறந்தால், சொத்து என் சகோதரனுக்கு மட்டும் செல்லுமா அல்லது அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுமா? என்று கேட்டுள்ளார்.


