சிங்கப்பூரில் ஆசிரியர் ஒருவர் 5 வயது சிறுமியை வரிசையாக அமர வைப்பதற்காக சிறுமியின் வலது தாடையில் உதைத்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்தது.
சிறுமிக்கு காயம் இருப்பதைக் கண்ட அறிந்த பெற்றோர் அன்றைய நாளே காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர் சிறுமிக்கு ஒரு செ.மீ அளவிலான ரத்தக் கசிவு அல்லது வலது தாடையில் மோசமான காயம் இருப்பதாக கூறினார்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது.

