தற்போதைய சூழலை தேச விரோதிகள் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதால், தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல், தங்களின் கல்வியில் கவனம் செலுத்தும் நோக்கில் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். இளைஞர்களின் முதல் கோரிக்கை நிறைவேறியதால், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக்களம் கொண்டாட்ட களமாக மாறியது. அப்போது பேசிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, இளைஞர்களுடன் மோதாதீர்கள், இதுதான் ஜனநாயகம் என்று சூளுரைத்தார்.

