அப்போது, “கலைஞர் இருந்து இருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு இருக்காது. அவர் இருக்கும் வரை யாரும் வாலாட்ட முடியவில்லை. எல்லோரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக எல்லா ஆட்சிகளும் தள்ளாடிக்கொண்டு இருக்கும் போது, அப்போதே 69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர். என்னிடம் பேசிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறினார், கலைஞர் இல்லை என்றால் என்னால் ஐஏஎஸ் அதிகாரி ஆகி இருக்க முடியாது என்று கூறினார். கலைஞர் உடன் நிறைய அனுபவங்கள் எனக்கு இருந்தது. இருவர் படம் நடித்து 28 வருடங்கள் ஆகின்றது. 30 ஆண்டு காலம் முன்பாக தமிழகத்திற்கு வந்த போது, எனது மனதில் இருந்த கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார். நான் இருவர் படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அவரை கதாபாத்திரத்தில் பிரதிபலிக்க எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது. இருவர் படத்தில் தண்டவாளத்தில் படுத்திருப்பது போன்ற காட்சி ஒன்று வரும். அதில் நான் படுத்திருக்கும் போது எனக்கு வேர்த்து விட்டது. ஆனால் ஒருவர் உண்மையிலேயே நிஜ வாழ்க்கையில் செய்திருக்கிறாரே என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருந்தது.” என கூறி இருந்தார்.

