ஒவ்வொரு நிதி ஆண்டும் வரி சேமிப்பு பருவத்துடன் முடிவடைகிறது. அக்கவுண்ட்களை தொடர்ந்து செயல்பாட்டில் வைப்பதற்கு பல்வேறு வரி சேமிப்பு திட்டங்களில் அக்கவுண்ட் ஹோல்டர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தப்பட்ச டெபாசிட்களை செய்ய வேண்டும். பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF), நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS), மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) போன்றவை இந்த வரி சேமிப்பு திட்டங்களில் சில.
இந்த திட்டங்களை ஒழுங்குப்படுத்தி வங்கி கணக்குகளை தொடர்ந்து செயல்பாட்டில் வைப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தப்பட்சம் டெபாசிட் தேவைப்படுகிறது. வருடத்தில் ஒருமுறை குறைந்தப்பட்ச டெபாசிட் செய்வதற்கு ஒருவர் தவறிவிட்டால் அக்கவுண்ட் பிளாக் செய்யப்படலாம் மற்றும் அந்த அக்கவுண்ட் மீது அபராத தொகை விதிக்கப்படும். தற்போதைய நிதி ஆண்டில் PPF, NPS, மற்றும் சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட்களுக்கான குறைந்தப்பட்ச டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2024.
அபராத தொகையை தவிர்ப்பதற்கு மார்ச் 31, 2024 மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கு ஆண்டு டெபாசிட்டாக எவ்வளவு குறைந்தப்பட்ச தொகை செலுத்த வேண்டும் என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
PPF அக்கவுண்ட்:
PPF அக்கவுண்ட்டை ஆக்டிவாக வைப்பதற்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் நீங்கள் குறைந்தப்பட்சமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். அவ்வாறு நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறை குறைந்தப்பட்ச தொகையை டெபாசிட் செய்ய தவறிவிட்டால் உங்களுடைய PPF அக்கவுண்ட் டீ-ஆக்டிவேட் ஆகிவிடும். உங்களுடைய PPF அக்கவுண்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு நீங்கள் பணம் செலுத்தாத ஒவ்வொரு வருடத்திற்கும் 50 ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும்.
ஒரு PPF அக்கவுண்ட் இன்ஆக்டிவ் ஆகிவிட்டால் அதில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது வித்டிரா செய்யவோ முடியாது.
NPS அக்கவுண்ட்:
NPS அக்கவுண்ட் ஹோல்டர்கள் டயர்-1 NPS அக்கவுண்டில் ஒவ்வொரு வருடமும் 1000 ரூபாய் குறைந்தப்பட்ச தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த குறைந்தப்பட்ச டெபாசிட் விதி NPS டயர்-2 அக்கவுண்டுகளுக்கு பொருந்தாது. வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80CCD(1B) -இன் கீழ் 50,000 ரூபாய் வரி சேமிப்பு பெறுவதற்காக NPS அக்கவுண்ட் திறக்கப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் உங்களுடைய 80CCD(1B) அக்கவுண்டில் குறைந்தபட்ச பேமெண்ட் செலுத்தாவிடல் அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும்.
SSY அக்கவுண்ட்:
பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க நினைக்கும் நபர்களுக்கு இது ஒரு அற்புதமான வரி சேமிப்பு முதலீடாகவும் அமைகிறது. SSY திட்டத்தில் ஒருவர் ஒவ்வொரு வருடமும் குறைந்தப்பட்ச தொகையாக 250 ரூபாய் டெபாசிட் செய்வது அவசியம். குறைந்தப்பட்ச தொகை செலுத்தாத அக்கவுண்டுகள் கடன் தவறியதாக அறிவிக்கப்படும். மெச்சூரிட்டிக்கு முன்பாக இந்த கடன் தவறிய அக்கவுண்டுகளை ஒருவர் மீண்டும் ஆக்டிவேட் செய்யலாம்.
Also Read : பஞ்சாப் நேஷனல் வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? அப்போ தாமதிக்காம இதை உடனே செய்யுங்க!
கடன் தவறிய ஒவ்வொரு வருடத்திற்கும் 50 ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும். இந்த அபராத தொகை அல்லாமல் ஒவ்வொரு கடன் தவறிய வருடத்திற்கும் குறைந்தப்பட்ச டெபாசிட்டாக 250 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.
எனவே PPF, NPS, அல்லது SSY போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களின் உரிமையாளர்களான அக்கவுண்ட் ஹோல்டர்கள் அபராத தொகையை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு வருடமும் குறைந்தப்பட்ச டெபாசிட் செய்வதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், அவர்களுக்கு வரி சேமிப்பு வட்டி மற்றும் வரி சேமிப்பு பலன்கள் கிடைக்காமல் போகலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
