MIS திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் இவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்: இத்திட்டத்தின் மூலம் ஈட்டப்படும் வட்டியை மாதந்தோறும், காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இக்காலாவதி முடிவதற்கு முன்பே கணக்கை முடித்துக்கொள்ளலாம். கணக்கு தொடங்கிய 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் அதை முடித்தால், முதலீட்டுத் தொகையில் 2% பிடித்தம் செய்யப்படும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால், முதலீட்டுத் தொகையில் 1% பிடித்தம் செய்யப்படும். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடித்து, வைப்புத்தொகையை நாமினியிடம் (வாரிசுதாரரிடம்) வழங்கலாம்.


