வட்டி மூலம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி?: இந்த அரசுத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வட்டி மூலம் மட்டும் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிக்க முடியும். இதற்காக, நீங்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒரே முறை முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் திட்டம் கால்குலேட்டரின்படி, நீங்கள் ரூ.4.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7.5% வட்டி விகிதத்தில், முதிர்வு காலத்தில் உங்களுக்கு மொத்தம் ரூ.6,52,477 கிடைக்கும். இதில், ரூ.2,02,477 வட்டி வருமானமாக மட்டுமே இருக்கும்.


