• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PNB வாடிக்கையாளரா நீங்கள்? கணக்கு மூடப்படுவதைத் தவிர்க்க ஆகஸ்ட் 12க்குள் இதைச் செய்யுங்கள்!

GenevaTimes by GenevaTimes
August 9, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
PNB வாடிக்கையாளரா நீங்கள்? கணக்கு மூடப்படுவதைத் தவிர்க்க ஆகஸ்ட் 12க்குள் இதைச் செய்யுங்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், கூடிய விரைவில் KYC புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் கணக்கு செயலிழந்து போகலாம். பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. தோராயமாக சுமார் 325,000 கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் KYC ஐ இன்னும் புதுப்பிக்கவில்லை. அத்தகைய நபர்கள் தங்கள் KYC ஐ ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அனைத்து வங்கிகளிலும் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்கள் KYC விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். அதன் படி, மார்ச் 31 வரை தங்கள் KYC விவரங்களைப் புதுப்பிக்காத சுமார் 325,000 வாடிக்கையாளர்களை பஞ்சாப் நேஷனல் வங்கி அடையாளம் கண்டுள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் தங்கள் KYC தகவலைப் புதுப்பிக்க ஆகஸ்ட் 12 வரை வங்கி காலக்கெடுவை விதித்துள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் வாடிக்கையாளர்கள் KYC தகவலைப் புதுப்பிக்கவில்லை என்றால், அவர்களின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மார்ச் 31ஆம் தேதிக்குள் KYC விவரங்களைப் புதுப்பிக்காதவர்களுக்கு மட்டுமே இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும் என்று PNB கூறியுள்ளது. அவர்கள் தங்கள் KYC விவரங்களை குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் புதுப்பித்தால், அவர்களின் கணக்குகள் தொடர்ந்து சீராக இயங்கும். இல்லையெனில், அவர்களின் கணக்குகள் செயலிழந்து, பணத்தை எடுக்கவோ, கடன் வாங்கவோ அல்லது வேறு நோக்கங்களுக்காக கணக்கைப் பயன்படுத்துவதையோ செய்ய முடியாது. அவர்களின் அனைத்து சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளும் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது. .

விளம்பரம்

KYC ஐ எவ்வாறு புதுப்பிப்பது:

KYC-ஐப் புதுப்பிக்க, வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு செல்ல வேண்டும். அடையாளச் சான்று, முகவரிச் சான்று, சமீபத்திய புகைப்படம், பான் கார்டு, வருமானச் சான்று மற்றும் மொபைல் எண் போன்ற தேவையான ஆவணங்களை உடன் கொண்டு செல்ல வேண்டும். அங்கு KYC படிவத்தை பூர்த்தி செய்யும் வங்கி ஊழியர்களுக்கு இந்த ஆவணங்களை வழங்குவதன் மூலம் KYC செயல்முறை முடிக்கப்படுகிறது. வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் மாற்றாக, PNB One, Internet Banking Services (IBS) மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல்/அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் KYC ஐப் புதுப்பிக்கலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

விளம்பரம்

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மற்றும் இதுவரை KYC விவரங்களைப் புதுப்பிக்காத அனைவரும், ஏதாவது ஒரு வழியில் KYC ஐ உடனடியாக புதுப்பித்தால், கணக்கு மூடப்படாது. மேலும், எதிர்காலத்தில் பரிவர்த்தனை செய்ய வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில், மீண்டும் வங்கியை சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படும்.

.

Read More

Previous Post

ரூ.1 லட்சம் வரை பணம் தேவையா? PF தொகையை பெறுவது எப்படி? EPFO கைட்லைன்ஸ்!

Next Post

பெண்ணின் திருமண வயது 9: ஈராக்கில் மசோதா தாக்கல் | Iraq Proposes Law To Reduce Legal Age Of Marriage For Girls To 9

Next Post
பெண்ணின் திருமண வயது 9: ஈராக்கில் மசோதா தாக்கல் | Iraq Proposes Law To Reduce Legal Age Of Marriage For Girls To 9

பெண்ணின் திருமண வயது 9: ஈராக்கில் மசோதா தாக்கல் | Iraq Proposes Law To Reduce Legal Age Of Marriage For Girls To 9

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin