பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் 20வது தவணைக்கான நிதி, 9.7 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து 20,500 கோடி ரூபாயை விடுவித்தார். அதே சமயம், மத்திய அரசு ஒரு முக்கிய உத்தரவையும் பிறப்பித்து உள்ளது. இதன்படி, தகுதியற்ற பல விவசாயிகள் திட்டத்திலிருந்து நீக்கப்படலாம். சந்தேகத்திற்குரிய விவசாயிகளின் 20வது தவணைக்கான பணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


