Last Updated:
PF | இந்த மாதம் முதலில் இருந்து EPF மெம்பர்கள் தங்களுடைய சேமிப்புகளில் 90% பணத்தை நிலம் வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு வித்டிரா செய்து கொள்ளலாம்.
மாத வருமானம் பெறும் நபர்கள் தங்களுடைய PF அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு இனியும் பணி ஓய்வு பெறும் வரையோ அல்லது வேலையை இழக்கும் வரையோ காத்திருக்க தேவையில்லை. EPFO நிறுவனம் அளித்த பரிந்துரையின் பெயரில், PF பணத்தை வித்டிரா செய்வதற்கான விதிகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்டால். இனி வரும் காலத்தில் சப்ஸ்க்ரைபர்கள் தங்களுடைய EPF பணத்தை முழுமையாகவோ அல்லது 10 வருடங்களுக்கு ஒருமுறையோ பிரித்து எடுப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இப்போது உள்ள சூழ்நிலையில் EPF மெம்பர்கள் தங்களுடைய முழு PF பணத்தையும் பணி ஓய்வுக்குப் பிறகு மட்டுமே எடுக்க முடியும். இது வழக்கமாக 58 வயதில் அவர்களுக்கு கிடைக்கிறது. ஒருவேளை தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் அவர்கள் வேலை இல்லாமல் இருந்தால் EPF பணத்தை வித்டிரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் வீடு வாங்குவது, மருத்துவ செலவு, கல்வி அல்லது திருமணம் போன்ற குறிப்பிட்ட சில காரணங்களுக்கு PF தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை வித்டிரா செய்து கொள்ளலாம்.
இந்த மாதம் முதலில் இருந்து EPF மெம்பர்கள் தங்களுடைய சேமிப்புகளில் 90% பணத்தை நிலம் வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு வித்டிரா செய்து கொள்ளலாம். முன்னதாக, EPF அக்கவுண்டில் தொடர்ச்சியாக 5 வருட காலத்திற்கு பங்களித்தவர்களுக்கு மட்டுமே இந்த பலன் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது இதற்கான தகுதி என்பது வெறும் 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தங்களுடைய சேமிப்புகளை வீடு வாங்குவதற்கு பயன்படுத்துவது மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது.
பின்வரும் காரணங்களுக்காக மட்டுமே EPF மெம்பர்கள் முழு PF தொகையையும் வித்டிரா செய்யும் வகையில் இருந்தது.
- பணி ஓய்வுக்கு பிறகு 58 வயது
- உறுப்பினர் தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால்
PF தொகையில் ஒரு பகுதியை பின்வரும் காரணத்திற்காக வித்டிரா செய்து கொள்ளலாம்
- வீடு வாங்குவது அல்லது கட்டுவது
- மருத்துவ செலவுகள்
- கல்விக்கான செலவுகள்
- திருமணம் சம்பந்தமான செலவுகள்
இப்போது தொடர்ச்சியாக 3 வருட காலம் PF அக்கவுண்டில் பங்களித்த மெம்பர்கள் தங்களுடைய EPF பேலன்ஸில் இருந்து 90 சதவீத தொகையை வித்டிரா செய்து கொள்ளலாம். முன்னதாக, இது 5 வருடமாக இருந்தது. அது மட்டுமல்லாமல், அட்வான்ஸ் கிளைம் செய்வதற்கான உச்சவரம்பு என்பது 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முன்கூட்டிய அப்ரூவல் இல்லாமல் பணத்தை விரைவாகவும் எளிமையாகவும் வித்டிரா செய்து கொள்ளலாம்.
July 19, 2025 5:33 PM IST


