தொடக்கவீரர்களாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகார் தவானும், ஜானி பெயர்ஸ்டவ்வும் களமிறங்கினர். இதில் ஷிகார் தவான் 14 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஸ்வர் குமாரின் பந்தில் அவுட்டானார். அதன்பின் வந்த ஜானி பெயர்ஸ்டவ், கம்மின்ஸின் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். அதன்பின் வந்த பிரப்சிம்ரன் சிங், புவனேஸ்வர் குமாரின் பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அதன்பின் வந்த சாம் கரண் 29 ரன்கள் எடுத்திருந்தபோது, நடராஜனின் பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் வந்த சிக்கந்தர் ரைஸா, 28 ரன்கள் அடித்திருருக்கும்போது, உனட்கட்டிடம் அவுட்டானார். இதனால் சரியான ஃபார்மில் இல்லாமல் பஞ்சாப் அணி திணறியது. அதன்பின் இறங்கிய ஷஷாங்க் சிங் நிதானித்து ஆடினார். அவர் 25 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரிகளை விளாசி மொத்தமாக 46 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், இவருக்கு பார்ட்னர்ஷிப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜிதேஷ் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டியின் பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இருந்தாலும் அடுத்து களம்புகுந்த அசுதோஷ் ஷர்மா நன்கு விளையாடினார். அவரும் இறுதி வரை ஆட்டமிழாக்காமல் இருந்து 15 பந்துகளில் 33 ரன்களைக் குவித்தார். உவரியாக பஞ்சாப் அணிக்கு கூடுதலாக 7 ரன்கள் கிடைத்தது. இருந்தாலும் 182 ரன்கள் இலக்கு என்ற நிலையை எட்டமுடியாமல் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களும், பட் கம்மின்ஸ், நடராஜன், நிதிஷ் குமார் ரெட்டி, உனட்கட் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டும் எடுத்தனர்.