அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.
அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்திய அரசு அதிகாரியான விகாஸ் யாதவ் (39) குற்றவாளி என கடந்த செவ்வாய் அன்று அறிவித்தது. விகாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் பணியமர்த்தப்பட்ட முன்னாள் RAW அதிகாரியாவார்.
வியாழக்கிழமை புது தில்லியில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளா விகாஸ் குறித்து “அவர் இப்போது இந்திய அரசின் ஊழியர் அல்ல” எனக் கூறினார்.

