Last Updated:
பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்ட நிலையில், நீண்ட கால விசா மூலம் இந்தியா வந்துள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்களுக்கான விசா ரத்து செய்யப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நீண்ட கால விசா என்றால் என்ன?
காஷ்மீரின் பிரபல சுற்றுலாதலமான பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த குதிரை ஓட்டி உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்தத் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல்வேறு நாடுகளும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடப்படும். பாகிஸ்தானியர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறவும் ஆணை. சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தான் மக்கள் இந்தியா வர தடை. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு.
பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற ஆணை. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 30 ஆக குறைப்பு. சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு. பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்படும் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.
இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா மீது சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, வாகா எல்லை மூடல், இந்தியர்களுக்கான சார்க் விசாக்கள் நிறுத்திவைப்பு, இந்திய இராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என அறிவிப்பு, இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வான்வெளி மூடல், இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தம்,
பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்ட நிலையில், நீண்ட கால விசா மூலம் இந்தியா வந்துள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்களுக்கான விசா ரத்து செய்யப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீண்ட கால விசா என்பது, பொதுவாக பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு குறுகிய கால விசாவில் இந்தியாவிற்கு வந்து நீண்ட கால குடியுரிமை பெறும் நோக்கத்துடன் வழங்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருக்கும் சிறுபான்மையினர்களான இந்துக்கள், சீக்கியர்கள், புத்தம், ஜெயின், பார்சி மற்றும் சிறிஸ்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஐந்து வருடங்கள் வரை இந்த நீண்ட கால விசா வழங்கப்படுகிறது.
April 25, 2025 3:04 PM IST
Pahalgam attack: பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்களுக்கு விசா ரத்து செய்யப்படமாட்டாது – மத்திய அரசு அறிவிப்பு


