• Login
Thursday, July 31, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Operation Sindoor: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கொடுத்த விளக்கம்; எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா?

GenevaTimes by GenevaTimes
July 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Operation Sindoor: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கொடுத்த விளக்கம்; எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ராணுவத்தை சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பது கூட பாஜக அரசுக்குத் தெரியவில்லை. தனது இமேஜை காக்க ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். நமது படைகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவது அபாயகரமானது. இந்திய ராணுவத்தின் கைகளை பின்னால் கட்டாதீர்கள்” என ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசினார்.

நரேந்திர மோடி

அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், “தீவிரவாதத்தின் மையத்தை வேரோடு பெயர்த்துள்ளோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதே நமது இலக்கு என்பதை உரியவர்களுக்கு உணர்த்தியுள்ளோம். போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் மன்றாடியது. நாம் போரை தீவிரப்படுத்த விரும்பாததால் போரை நிறுத்தினோம். போரை நிறுத்தும்படி நம்மிடம் யாரும் (டிரம்ப்) கோரவில்லை. உலகின் எந்தத் தலைவரும் போரை நிறுத்த நிர்ப்பந்திக்கவில்லை” என பேசினார்.

இதன் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும், எம்.பி.க்களும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து தங்களது கருத்துகளை வைத்தனர்.

ராகுல் காந்தி

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா அதிபர் உண்மைக்கு மாறான தகவலை சொல்கிறார் என சொல்லவே இல்லை. அவரின் மொத்த பேச்சில் ஒரு முறை கூட சீனாவை குறிப்பிடவில்லை. பாகிஸ்தானுக்கு, சீனா அனைத்துவிதத்திலும் உதவியது என நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகிய இருவருமே தங்கள் பேச்சின் ஒரு இடத்தில் கூட சீனாவைப் பற்றி பேசவே இல்லை” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி எம்பி கே.சி. வேணுகோபால், “நாங்கள் மிகத் தெளிவாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூற்று போலியானதா இல்லையா, அவர் உண்மையைச் சொல்கிறாரா இல்லையா என்பதை கேட்கிறோம். ஆனால், அதற்கு பதிலே இல்லை. அவருக்கு அதிபர் டிரம்ப் பற்றி பேசுவது பயமாக இருக்கிறதா? டிரம்ப் சொல்வது உண்மையல்ல என்று அவர் சொல்ல வேண்டும்.

கே.சி. வேணுகோபால்

எதிர்க்கட்சிகள் அறிவுப்பூர்வமான கேள்விகளைக் கேட்டால் உடனே பாகிஸ்தானின் கதைக்குப் பின் மோடி ஒளிந்துகொள்வார். இது மக்களுக்கே தெரியும். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்தியாவுடனும் இருக்கிறோம்” என்றார்.

சசி தரூர்

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர், “பேச விருப்பமுள்ள ஒருவரிடம் பேசுங்கள். பத்திரிகையாளர்களிடம் பேச ஆர்வமுள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் இல்லை” எனத் தெரிவித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, “புதிதாக எதுவும் இல்லை. நாங்கள் எழுப்பிய கேள்விக்கு எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. நமது ராணுவத்தைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் எங்கள் பிரதமருடன் இருக்கிறோம். இதை நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம். இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே எங்களுக்கு பதில்கள் தேவை: 26 பேர் ஏன் கொல்லப்பட்டனர்? இது அரசாங்கத்தின் திறமையின்மை. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமைப்பட முயன்றபோது, அவர் ஏன் அவரைக் குறை கூறவில்லை?” எனத் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சி எம்.பி. அகிலேஷ் யாதவ், “நம் எல்லைகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாட்டைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நாம் ஆத்மநிர்பர் பற்றிப் பேசுகிறோம், நாடு சுயசார்புடையதாக இருக்க வேண்டும், உற்பத்தித் துறை விரிவடைய வேண்டும். ஆனால் நாம் ஒரு வர்த்தக நாடாக மாறிவிட்டோம்.

பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருந்தால், மீண்டும் ஒரு முறை உளவுத்துறை தோல்வி ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் எப்படி மீண்டும் மீண்டும் இந்தியாவிற்கு வருகிறார்கள் என்பதை அரசாங்கம் நமக்குச் சொல்லுமா? அதற்கு யார் பதில் சொல்வார்கள்? அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? ரஃபேல் புறப்பட்டதா அல்லது இல்லையா?” எனத் தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியா உர் ரெஹ்மான் பர்க், “நாங்கள் சில கேள்விகளைக் கேட்டிருந்தோம். அவைக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் அந்த பதில்கள் கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன. ஆனால் எங்களுக்கு பதில்கள் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், “தனது 2 மணி நேர உரையில், பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூருக்கான முழுப் புகழையும் தானே பெற முயன்றார். தனது உரையின் தொடக்கத்தில், நாட்டு மக்கள் தன்னை ஆதரித்ததாகக் கூறினார்; அது தவறு.

கௌரவ் கோகோய்

மக்கள் அரசாங்கத்தையும் இந்திய ராணுவத்தையும் முழுமையாக ஆதரித்தனர். பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூருக்கான புகழைப் பெற முயன்றது வருத்தமளிக்கிறது. ஆனால் அவர் பஹல்காமுக்கு பொறுப்பேற்கத் தவறிவிட்டார்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 28-29 முறை (போர் நிறுத்தம் குறித்து) கூறினார். ஆனால் பிரதமர் மோடி அதை ஒரு முறை கூட மறுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 29, 2025 9:31 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Operation Sindoor: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கொடுத்த விளக்கம்; எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா?

Read More

Previous Post

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு அபராதம்: வெளியான அறிவிப்பு

Next Post

கம்பீர் vs ‘ஓவல்’ பிட்ச் கியூரேட்டர் இடையே கடும் வாக்குவாதம்: பின்னணி என்ன? | heated exchange between team india coach Gambhir vs Oval pitch curator

Next Post
கம்பீர் vs ‘ஓவல்’ பிட்ச் கியூரேட்டர் இடையே கடும் வாக்குவாதம்: பின்னணி என்ன? | heated exchange between team india coach Gambhir vs Oval pitch curator

கம்பீர் vs ‘ஓவல்’ பிட்ச் கியூரேட்டர் இடையே கடும் வாக்குவாதம்: பின்னணி என்ன? | heated exchange between team india coach Gambhir vs Oval pitch curator

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin