தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை நேற்று கைப்பற்றியது அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு.
அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படத்தை தனது ட்ரூத் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதில் மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டிருக்கிறார். அவரை அமெரிக்காவின் USS IWO Jima என்கிற போர்க்கப்பலில் வைத்திருப்பதாகவும் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.
வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட்டே அதிபரை சிறைப்பிடித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது.
இனி வெனிசுலாவை யார் ஆட்சி செய்வார்கள்?
இந்தச் சம்பவம் குறித்து பேச நேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார் ட்ரம்ப். அப்போது அவர் பேசியதாவது…
“வெனிசுலாவில் அடுத்து பாதுகாப்பான ஆட்சி மாற்றம் நடக்கும் வரையில், அந்த நாட்டில் அமெரிக்கா ஆட்சி நடத்தும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவிற்குச் சென்று அங்கு உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

