Last Updated:
சர்வதேசத்தில் ஏற்படும் எந்த சவால்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது – பிரதமர் மோடி
இந்தியர்களுக்கு சேவை செய்வதற்காக வாழ விரும்புகிறேன் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசியுள்ளார். நியூஸ் 18 குழுமம் நடத்தி வரும் ரைசிங் பாரத் மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நியூஸ் 18 குழுமம் டெல்லியில் “ரைசிங் பாரத்” என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மொத்தம் 75 அமர்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விஐபிகள் பேசுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு, உலக அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த “ரைசிங் பாரத்” மாநாட்டில் கருத்துரை வழங்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் மோடி கலந்துரையாடினார்.
பின்னர் அவர் பேசுகையில், நான் பிரபலம் அடைவதற்காக வாழ விரும்பவில்லை. இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வாழ விரும்புகிறேன். 2047 ஆண்டை மையப்படுத்தி இந்தியா வளர்ச்சிக்கான பாதையில் பயணம் செய்யத் தயாராகி விட்டது. சர்வதேசத்தில் ஏற்படும் எந்த சவால்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது. மாறாக அவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 2 மடங்காக உயர்த்தும்.
இளைஞர்களை மையப்படுத்தியே என்னுடைய திட்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அவை இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளன.
உலக நாடுகள் இந்தியாவை ஒரு நாடாக மட்டும் பார்க்காமல், நாட்டின் தலைமை, பின்னடைவு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றையும் உன்னிப்பாக கவனிக்கின்றன. என்று பேசினார்.
April 08, 2025 8:43 PM IST
Rising Bharat Summit 2025: ‘இந்தியர்களுக்கு சேவை செய்வதற்காகவே வாழ விரும்புகிறேன்’ – நியூஸ் 18 மாநாட்டில் பிரதமர் உருக்கம்


