நாடு முழுவதும் 95,000 வாக்காளர்களிடம் தேர்தலுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நியூஸ் 18 தொலைக்காட்சிக் குழுமம் நடத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு வெவ்வேறு தேதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில் யாருக்கு வெற்றி என்பது ஜூன் 4ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நாடு முழுவதும் 21 முக்கிய மாநிலங்களில் நியூஸ் 18 தொலைக்காட்சி குழுமம் நடத்தி உள்ளது.
முன்பு போல், தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிக்கு வெளியே நின்று கொண்டு வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துவதை கைவிட்டு, அதற்கு அடுத்த நாள், வாக்காளர்களை சந்தித்து தேர்தலுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது நியூஸ் 18 குழுமம்.
இதையும் படிங்க : மக்களவைத் தேர்தலில் வெல்லப் போவது யார்? – கருத்துக்கணிப்பு முடிவுகள்!
முதற்கட்டம் தொடங்கி 6-வது கட்ட வாக்குப்பதிவு வரை இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. எனினும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்து வாக்காளர்களிடம் கேள்விகளை கேட்டு துல்லியமான பதில்கள் பெறப்பட்டன.
இதையும் படிங்க:
News 18 Exit Poll | தமிழ்நாட்டில் யாருக்கு எத்தனை தொகுதிகள்? வெளியானது நியூஸ் 18 மெகா கருத்துக் கணிப்பு
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் 32 இடங்கள் முதல் 35 இடங்களை கைப்பற்றும் என நியூஸ் 18 குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 15 இடங்கள் முதல் 18 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)