Last Updated:
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் முதன் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி மாற்றங்களால், சாமானிய மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பல தரப்பினருக்கும் பாதிப்புகளும் சலுகைகளும் கிடைத்துள்ளன.
குறிப்பாக, ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
News 18 Exclusive : பட்ஜெட்டுக்கு பின்னர் முதன்முறை.. நியூஸ் 18-க்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி..


