NDP 2025: சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்புக்கான டிக்கெட்களுக்கு நாளை மே 28 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
தேசிய தின அணிவகுப்பு (NDP) அல்லது படாங்கில் நடைபெறும் இரண்டு நாள் தேசிய தின முன்னோட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாளை புதன்கிழமை (மே 28) நண்பகல் 12 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது
அதாவது, ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் இரண்டு முன்னோட்ட நிகழ்ச்சிகள் அல்லது ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கலந்துகொள்ளலாம்.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் குறிக்கும் இந்த அணிவகுப்பு நிகழ்வில், சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வாசிகள் மட்டும் சிங்பாஸ் (Singpass ) கணக்கை கொண்டு விண்ணப்பம் செய்ய முடியும்.
இதில் சிங்கப்பூரர்களும் நிரந்தர வாசிகளும் அதிகபட்சமாக ஆறு டிக்கெட்டுக வரை விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.
ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒரு வாக்குச் சீட்டு அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர்… “சுமார் 5 கோடி மதிப்பு” – ஆடவரை கைது செய்த அதிகாரிகள்

