தோனிக்கும் சென்னைக்குமான பிணைப்பு பற்றி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா: “தோனி மற்றும் சென்னை ரசிகர்களின் பிணைப்பு உண்மையிலேயே அற்புதமானது. ஒரு வெளியூர் வீரரை சென்னையின் மகனாக ஏற்றுக்கொள்வது அரிதான விஷயம்.” என்றார்.
அதேநேரம் அஜய் ஜடேஜா பேசுகையில் “2008-ல் ஐபிஎல் தொடங்கியபோது, பஞ்சாபுக்கு யுவராஜ், டெல்லிக்கு சேவாக் ஒவ்வொரு அணிக்கும் ஒரு ஐகான் இருந்தனர். ஆனால் தோனி சென்னையின் அபிமானமாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.” எனக் கூறினார். அனில் கும்ப்ளேவோ, “தமிழ்நாட்டில் ஹீரோக்களை வழிபாடு வழக்கம் உள்ளது. அதனால், தோனி இங்கு கடவுளாக போற்றப்படுவதில் ஆச்சரியமில்லை.” எனக் கூறினார்.
தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை மாற்றம் குறித்து இவர்கள் பேசினார்கள்.
ஷேன் வாட்சன் பேசுகையில், “42 வயதாகியும் தோனி இன்னும் அசாத்தியத் தருணங்களை வழங்குகிறார். அவர் இப்போது ஒரு சற்றே பிற்போக்கான பங்கை மட்டுமே வகிக்கிறார். ஆனால் அணிக்கும் ரசிகர்களுக்கும் அவரின் தாக்கம் குறையவில்லை.” என்றார்.
ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “ஒரு அணியின் சீசன் எதிர்பார்த்தபடி செல்லவில்லை என்றால், ‘தோனி கீழே பேட் செய்ததால்’ எனப் பலர் கேள்வி கேட்கலாம். ஆனால் இது சிஎஸ்கே-வின் நீண்டகால உத்தி. அடுத்த தலைமுறைக்கு வழிவகுக்க ஒரு திட்டம்.”
ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், “கடந்த ஆண்டு தொடருக்கு ஒரு வாரம் முன், தோனி என்னிடம் வந்து, ‘இந்த வருடம் நான் தலைமை வகிக்கவில்லை நீதான் கேப்டன்’ என்றார். ஆச்சரியமாக இருந்தது. ‘முதல் போட்டியிலிருந்து? நீங்கள் உறுதியாக சொல்லுகிறீர்களா?’ என்று கேட்டேன். தயாராகத் தோன்றவில்லை. ஆனால் அவர் என்னை உற்சாகப்படுத்தினார். ‘இது உன் அணி. நீ உன் முடிவுகளை எடு. நான் தலையிட மாட்டேன். ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஆலோசனை தருவேன். அதையும் பின்பற்ற வேண்டியது கட்டாயமில்லை.’ அந்த நம்பிக்கை எனக்கு மிகவும் முக்கியமானது.” என தோனி பேசியதை பகிர்ந்து கொண்டார்.
ஷேன் வாட்சன் பேசுகையில் “தோனி தனது இயல்பான தலைமைச் செயல்பாட்டை தவிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கேப்டன் பதவியை வழங்கியது ஆச்சரியமானது. ஆனால், அவர் ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத மாற்றத்தை உறுதி செய்வதற்காக இதை செய்திருக்கிறார்.” எனக் கூறினார்.
ருதுராஜ் கெய்க்வாட்-ன் தலைமையில் சென்னை அணியை பற்றி பேசிய அனில் கும்ப்ளே, “ரோகித் சர்மா முதன்முறையாக கேப்டன் ஆனபோது, அணியில் பல கிரிக்கெட் லெஜெண்டுகள் இருந்தனர். அதுபோலத்தான், ஒருவராக நீங்கள் அந்த பொறுப்பை எப்படி ஏற்கிறீர்கள் என்பதில்தான் நிறைய இருக்கிறது. ருதுராஜ் அதை மிக நன்றாக கையாண்டார்.” எனக் கூறினார்.
ஆகாஷ் சோப்ராவோ “ஒரு பழைய கேப்டன் இன்னும் அணியில் இருந்தால், அது ஒத்துழைப்பா, இல்லையெனில் புதிய கேப்டன் உண்மையிலேயே ஆட்சி செலுத்துகிறாரா என்ற குழப்பமா?. ஆனால் தோனி ஒரு தனிப்பட்ட நபர் அவர் மாற்றத்தை மிக அமைதியாக, எந்த விதத்திலும் புதிய தலைவரை ஒடுக்காமல் நிகழ்த்துகிறார்.” எனக் கூறினார்.
ராபின் உத்தப்பா கூறுகையில் “2023 சீசன் சிஎஸ்கேவுக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் தலைமை மாற்றத்துக்கு சரியான தருணம் வந்தது. ருதுராஜ் அமைதியான, சமமான அணுகுமுறையுடன் இருப்பது, தோனியை நினைவுபடுத்துகிறது. அவர் ஒரு தலைவராக வளர்ந்து வருகிறார்.” எனக் கூறினார்.
ஷேன் வாட்சனோ, “ருதுராஜ் அபாரமாக செயல்பட்டுள்ளார். தோனி அணியில் இருந்தாலும், அது அவரின் பேட்டிங் ஆட்டத்தை பாதிக்கவில்லை. இது சிஎஸ்கேவின் தலைமை மாற்றத்திற்கான திட்டம் எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.” என வெளிப்படையாக பேசினார்.
Also Read | தோனியின் மகள் ஜிவா கல்விக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? – பள்ளியில் இத்தனை ஸ்பெஷலா?
தோனியின் எதிர்காலம் பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா, “தோனி இல்லாத காலத்திற்கு சிஎஸ்கே ஏற்கனவே திட்டமிடத் தொடங்கியுள்ளது. அவர் அணியில் இடம் பெறும் காலம் சீக்கிரம் முடிந்துவிடும்.” என்றார்.
அனில் கும்ப்ளே பேசுகையில் “ருதுராஜ் அணியின் தலைவராக இருப்பதால், இந்த சீசனில் தோனி இல்லாத நிலை ஏற்படலாம். ஆனால், retention விதிகளின்படி அவர் அணியில் இருக்கலாம். Impact Player விதியின் கீழ், அவர் மைதானத்தில் இல்லை என்றாலும், அணிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கலாம்.” எனப் புதிய தகவலை கொடுத்தார்.
டி வில்லியர்ஸ் பேசுகையில் “நீண்ட காலமாக கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் தோனி. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் நோக்கி இழுத்தவர். இன்னும் சில ஆண்டுகள் அவர் தொடர்வதற்காக நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம்.” என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
முழு எபிசோடை காண இங்கே கிளிக் செய்யவும் – https://www.hotstar.com/in/sports/cricket/csk-the-handover/1271396461/watch
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 06, 2025 5:02 PM IST

