MRT ரயில்களில் தொடர்ச்சியான சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 33 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 15 அன்று, MRT ரயிலில் ஆடவர் ஒருவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை கண்டதாக, பொதுமக்களில் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புக்கு விருது: “தஞ்சை ஊழியருக்கு கௌரவம்”
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகள் மூலம், பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஜூரோங் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை கண்டுபிடித்து நேற்று முன்தினம் (ஜூன் 7) அவரைக் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த ஆடவர் MRT ரயில்களுக்குள் இதே போன்ற பிற சம்பவங்களிலும் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றத்திற்காக அவர் மீது இன்று (ஜூன் 9) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது தண்டனைகள் சேர்த்தும் வழங்கப்படலாம்.
ஷின் மின் டெய்லி நியூஸ் இதற்கு முன்பு வெளியிட்ட செய்தியில், MRT ரயிலில் பெண்களின் அடிப்பகுதியில் தொடையை வைத்து அவர் தேய்ப்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்த்ததாக பெண் ஒருவர் கூறியிருந்தார்.
சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து மீண்டும் அதே நபர் ஜூரோங் ஈஸ்ட் MRT நிலையத்தில் காணப்பட்டதாக நேரில் கண்டவர் தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து ரயில் நிலைய ஊழியர்களிடம் தெரிவித்த அந்த பெண், போலீசிலும் புகார் அளித்தார்.
PHOTO: Shin Min Daily News & Google Maps

